NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

    எழுதியவர் Srinath r
    Dec 07, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

    வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கன மழையை கொட்டி தீர்த்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், மெதுவாக வெள்ளநீர் வடிந்து தலைநகர் மீண்டும் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வரும் நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார்.

    ஆவடி விமானப்படை தளத்திலிருந்து விமான மூலம் மழைவெள்ள பாதிப்புகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். மத்திய இணையமைச்சர் எல் முருகன் உடனிருந்தார்.

    2nd card

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் பிரதமர் வேதனை அடைந்துள்ளார்

    பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் பிரதமர் நரேந்திர மோடி வேதனை அடைந்துள்ளார்" என தெரிவித்தார்.

    "தற்போதைய நெருக்கடிக்கான நிலையை அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளார்."

    "இங்குள்ள நிலவரத்தை நேரில் கண்காணிக்க பிரதமர் எனக்கு உத்தரவிட்டுள்ளார்."

    "ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, வானிலை ஆய்வுத்துறை ,தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட மத்திய நிறுவனங்கள் தற்போதைய, புயல் பாதிப்பில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள தங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறார்கள்" என தெரிவித்தார்.

    3rd card

    வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு நிதி விடுவிப்பு

    தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி விடுவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

    "தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன்."

    "தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாம் தவணையாக ₹450 கோடியை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்."

    "மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கான மத்திய பங்கின் முதல் தவணை ₹450 கோடி முன்னதாக விடுவிக்கப்பட்டது."

    "நகர்ப்புற வெள்ளப் பிரச்சினையை சென்னை சமீப ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் கண்டுள்ளதால், நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு ₹500 கோடி மத்திய நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது" என தெரிவித்தார்.

    4th card

    மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார் 

    தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் ஸ்டாலின், புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தெரிவித்தார்.

    மேலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

    தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த பெருமழையிலும் உயிரிழப்புகளும், பொருட்சேதமும் குறைக்கப்பட்டுள்ளது என முதல்வர் பேசினார்.

    பின்னர், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் ₹5,060 கோடி கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முதல்வர், இடைக்கால நிவாரண நிதியாக ₹450 கோடி விடுவிக்கப்பட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஒன்றிய குழு, சென்னை வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

    embed

    விமான மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் அமைச்சர் ராஜ்நாத் சிங்

    #WATCH | Defence Minister Rajnath Singh conducts an aerial survey of flood-affected areas of Tamil Nadu #CycloneMichuang pic.twitter.com/dmXUSpJS2c— ANI (@ANI) December 7, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    செங்கல்பட்டு
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு மதுரை
    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  இந்தியா
    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு  விடுமுறை

    தமிழ்நாடு

    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழக அரசு
    "சக திரை நாயகி த்ரிஷாவே மன்னித்துவிடு"- மன்சூர் அலிகான் அறிக்கை மன்சூர் அலிகான்
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு செய்தி
    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  கனமழை

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  கர்ப்பம்
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    நரேந்திர மோடி

    'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக இந்தியா
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி இந்தியா
    பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025