NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் 

    தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2024
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார்.

    எனவே, தற்போது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே செயலில் உள்ள ஒரு உறுப்பினராக இருக்கிறார்.

    மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமா விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள், அவரது ராஜினாமா "ஆழ்ந்த கவலை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

    அரசாங்கம் இதற்கு நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

    இந்தியா

    "ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் பறிக்கப்படும்": கார்கே 

    காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன் கார்கே, இது தேர்தல் ஆணையமா அல்லது தேர்தல் புறக்கணிப்பா என மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியாவில் இப்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். ஏன்? நான் முன்பே கூறியது போல், நமது சுதந்திர அமைப்புகளின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால், நமது ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் பறிக்கப்படும்!'' என்று கார்கே கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்பு செயல்படுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மத்திய அரசு அந்த அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கிறது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் ஆணையம்
    மத்திய அரசு
    தேர்தல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தேர்தல் ஆணையம்

    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    வாக்காளர் அட்டை ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு  தமிழ்நாடு
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா

    மத்திய அரசு

    இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி இந்தியா
    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு மல்யுத்தம்
    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்றம்
    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி  திமுக

    தேர்தல்

    2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ்  காங்கிரஸ்
    தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் அமெரிக்கா ஆதரவு கட்சி வெற்றி  தைவான்
    தொடர்ந்து கட்சி தாவல்களை சந்திக்கும் காங்கிரஸ்: 2019 முதல் வெளியேறிய 12 பெரிய தலைவர்கள் காங்கிரஸ்
    மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025