NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
    சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா மற்றும் ஒரு வழக்கறிஞர்கள் குழு ஆஜராகி வாதாடி வருகிறது.

    ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 10, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் பலத்த பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புப் பணியக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா மற்றும் ஒரு வழக்கறிஞர்கள் குழு ஆஜராகி வாதாடி வருகிறது.

    இதனையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர்.

    குஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடியின் அலுவலகத்தில் 10 மணி நேரம் விசாரணை நடந்ததை தொடர்ந்து, இன்று அதிகாலை 3:40 மணிக்கு விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

    ட்னவ்க்

    கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு

    சுமார் 50 நிமிடங்கள் நீடித்த மருத்துவ சோதனைகளைத் தொடர்ந்து, அவர் நேரடியாக உள்ளூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், மருத்துவ சோதனை முடிந்ததும் அவரை மீண்டும் SIT அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், மனைவி நாரா புவனேஸ்வரி மற்றும் பலர் ஏசிபி நீதிமன்றத்தில் காத்திருந்தனர்.

    கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது.

    ஆனால், அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் தொடர்பாக சந்திரபாபு நாயுடு நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    சிஐடி

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    சிஐடி

    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம் கைது
    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்  ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025