NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம் 
    இந்த மோசடி வழக்கில் அப்போதைய அமைச்சர் கந்தா ஸ்ரீநிவாஸ் ராவுக்கும் தொடர்பு இருப்பதாக சிஐடி கூறியுள்ளது.

    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 09, 2023
    05:41 pm

    செய்தி முன்னோட்டம்

    திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டார்.

    அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை இப்போது பார்க்கலாம்.

    2014ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் சீமென்ஸ் செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் கிளஸ்டர்கள் நிறுவப்படும் என்று ஒரு அரசாணை வெளியிடபட்டது.

    இந்த திட்டத்திற்கு 3,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

    இந்த 3,300 கோடி ரூபாயில் 90% மானியத்தை தொழில்நுட்பக் கூட்டாளிகளான சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் ஆகிய நிறுவனங்கள் வழங்கின.

    ஆந்திர அரசாங்கம் 10% மட்டுமே மானியம் வழங்கியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும்(MoU) அந்த வருடமே கையெழுத்தானது.

    டிஜிகிவ்ன்

    விதிகளுக்கு புறம்பாக நிறுவப்பட்ட ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகம்

    ஆனால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் ஆகிய நிறுவனங்கள் வழங்கிய 90% பங்களிப்பு எங்குமே குறிப்பிடப்படவில்லை.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சந்திரபாபு நாயுடுவும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் கே.அச்சன் நாயுடுவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    இந்த மோசடி வழக்கில் அப்போதைய அமைச்சர் கந்தா ஸ்ரீநிவாஸ் ராவுக்கும் தொடர்பு இருப்பதாக சிஐடி கூறியுள்ளது.

    மேலும், அமைச்சர்கள் குழுவிற்கு தெரியாமல், விதிகளுக்கு புறம்பாக ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகம் அப்போது உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    ட்ஜ்வ்க்ன்

    ரூ.371 கோடி எப்படி மோசடி செய்யப்பட்டது?

    "அப்போதைய ஆந்திரப் பிரதேச அரசு ரூ.371 கோடியை இந்த திட்டத்திற்காக எடுத்திருக்கிறது. ஆனால், அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே சிறப்பு மையங்களை நிறுவ பயன்படுத்தப்பட்டது" என்று சிஐடி தலைவர் என் சஞ்சய் கூறியுள்ளார்.

    மீதமிருந்த தொகைகள் ஷெல் நிறுவனங்கள் மற்றும் போலி விலைப்பட்டியல் மூலம் வேறுவிதமாக திருப்பிவிடப்பட்டு மோசடி நடந்திருக்கிறது.

    மேலும், விசாரணையின் போது விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருப்பது போலியான முகவரிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    திஜுவ்க்

    'இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளியும், முக்கிய சதிகாரரும் சந்திரபாபு நாயுடு தான்'

    இந்த நிதி மோசடியின் பின்னணியில் சந்திரபாபு நாயுடுவும் மற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் இருப்பதாக சிஐடி தலைவர் என் சஞ்சய் கூறியுள்ளார்.

    "ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களிடம் இருந்து விசாரணை தொடங்கப்பட்டாலும், ஷெல் நிறுவனங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதியை மாற்றியதைத் திட்டமிட்டவரும், இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளியும், முக்கிய சதிகாரரும் சந்திரபாபு நாயுடு தான்." என்று என் சஞ்சய் கூறியுள்ளார்.

    திறன் மேம்பாட்டுக் கழகம் டிசைன் டெக்கிற்கு செலுத்திய ரூ. 371 கோடியில் ரூ. 58.8 கோடியை மட்டுமே சீமென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    ட்னவ்க்ஜ்

    ரூ.241 கோடியை கூட்டு மோசடி செய்த நிறுவனங்கள் 

    அப்போது சீமென்ஸ் நிறுவனத்தின் எம்.டியாக இருந்த சுமன் போஸ் மற்றும் டிசைன் டெக் எம்.டி கான்வில்கர் ஆகியோர் ரூ.241 கோடியை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

    ஹவாலா சேனல்கள் மூலம் இந்த தொகைகள் ஹைதராபாத் மற்றும் புனேவுக்கு அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஸ்கில்லர் எண்டர்பிரைசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் முன்னாள் நிதி ஆலோசகர் போஸ், கான்வில்கர், முகுல் சந்திர அகர்வால் மற்றும் பட்டய கணக்காளரான சுரேஷ் கோயல் ஆகியோரை இந்த ஆண்டு தொடக்கத்தில், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்தது.

    டிசைன் டெக் நிறுவனத்திற்கு சொந்தமான ₹ 31.2 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் ED தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    அமலாக்க இயக்குநரகம்
    சிஐடி

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    சிஐடி

    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம் கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025