NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 
    கடைசியாக 2023 அக்டோபரில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, 46 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது

    மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 08, 2024
    09:37 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மேலும் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

    இந்த உயர்வின் மூலம், தற்போதுள்ள 46 சதவீதத்தில் இருந்து, அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை எட்டிவிடும்.

    கடைசியாக 2023 அக்டோபரில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, 46 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

    அகவிலைப்படி என்பது பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்ய வடிவமைக்கப்பட்ட சம்பளத்தின் ஒரு அங்கமாகும். இது ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியத்தை திறம்பட அதிகரிக்கிறது.

    அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு, ஆண்டுக்கு ரூ.12,869 கோடியாக இருக்கும். இதன் தாக்கம் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.15,014 கோடியாக இருக்கும்.

    மத்திய அரசு 

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் அலவன்ஸ்

    அகவிலைப்படி உயர்வு தவிர, போக்குவரத்து அலவன்ஸ், கேன்டீன் அலவன்ஸ், டெபுடேஷன் அலவன்ஸ் உள்ளிட்டவை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.

    வீட்டு வாடகை கொடுப்பனவு அடிப்படை ஊதியத்தில் 27 சதவீதம், 19 சதவீதம் மற்றும் 9 சதவீதத்தில் இருந்து முறையே 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது.

    கருணைத் தொகையின் கீழ் உள்ள பலன்கள் தற்போதுள்ள ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் உச்சவரம்புடன் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    பல்வேறு கொடுப்பனவுகள் அதிகரிப்பால் கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.9,400 கோடி சுமை ஏற்படும்.

    அறிவிக்கப்பட்டுள்ள DA மற்றும் DR அதிகரிப்பு, 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    மத்திய அரசு

    மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு
    இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி இந்தியா
    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு மல்யுத்தம்
    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025