Page Loader
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 
கடைசியாக 2023 அக்டோபரில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, 46 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 08, 2024
09:37 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மேலும் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இந்த உயர்வின் மூலம், தற்போதுள்ள 46 சதவீதத்தில் இருந்து, அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை எட்டிவிடும். கடைசியாக 2023 அக்டோபரில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, 46 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அகவிலைப்படி என்பது பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்ய வடிவமைக்கப்பட்ட சம்பளத்தின் ஒரு அங்கமாகும். இது ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியத்தை திறம்பட அதிகரிக்கிறது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு, ஆண்டுக்கு ரூ.12,869 கோடியாக இருக்கும். இதன் தாக்கம் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.15,014 கோடியாக இருக்கும்.

மத்திய அரசு 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் அலவன்ஸ்

அகவிலைப்படி உயர்வு தவிர, போக்குவரத்து அலவன்ஸ், கேன்டீன் அலவன்ஸ், டெபுடேஷன் அலவன்ஸ் உள்ளிட்டவை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. வீட்டு வாடகை கொடுப்பனவு அடிப்படை ஊதியத்தில் 27 சதவீதம், 19 சதவீதம் மற்றும் 9 சதவீதத்தில் இருந்து முறையே 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது. கருணைத் தொகையின் கீழ் உள்ள பலன்கள் தற்போதுள்ள ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் உச்சவரம்புடன் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கொடுப்பனவுகள் அதிகரிப்பால் கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.9,400 கோடி சுமை ஏற்படும். அறிவிக்கப்பட்டுள்ள DA மற்றும் DR அதிகரிப்பு, 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.