NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
    அந்தமான் நிக்கோபார், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும்.

    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    May 12, 2023
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRF) மேற்கு வங்கத்திற்கு 8 குழுக்களையும் 200 மீட்புப் பணியாளர்களையும் அனுப்பியுள்ளது.

    "நாங்கள் எட்டு குழுக்கள் மற்றும் 200 மீட்புப் பணியாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளோம். மேலும் 100 மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்" என்று NDRFஇன் 2வது பட்டாலியன் கமாண்டன்ட் குர்மிந்தர் சிங் கூறினார்.

    இந்திய கடலோர காவல்படையும்(ICG) மேற்கு வங்கத்தில் உள்ள தனது பிரிவுகளை அதிக உஷார் நிலையில் வைத்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைக்குள் மோக்கா புயல் படிப்படியாக தீவிரமடைந்து தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

    details

    அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது

    இந்த மோக்கா புயல் பங்களாதேஷ்-மியான்மர் எல்லையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கரையை கடக்கும் போது, மணிக்கு 150-160 கிமீ வேகத்தில் காற்று வீசுக்ககூடும்.

    காக்ஸ் பஜார் அருகே பங்களாதேஷின் தாழ்வான கடலோரப் பகுதியில் 1.5-2 மீட்டர் அளவுக்கு புயல் எழும் என்று IMD கணித்துள்ளது.

    மீனவர்கள் மற்றும் பயணிகள் மத்திய/வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும், இயற்கை பேரிடர்களை கையாள அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்தமான் நிக்கோபார், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மேற்கு வங்காளம்
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    இந்தியா

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் தீபக் போரியா, நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி! உலகம்
    மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு  மத்திய பிரதேசம்
    திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம்  உச்ச நீதிமன்றம்
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  கர்நாடகா

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் பாஜக
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    வானிலை அறிக்கை

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் தொடர் மழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை இந்தியா
    தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும்: வானிலை அறிக்கை இந்தியா
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்: வானிலை அறிக்கை  தமிழ்நாடு

    வானிலை எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    -4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது இந்தியா
    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இலங்கை
    இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025