NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கார்பெட் புலிகள் காப்பகத்தில் பெண்களை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படும் கேமரா ட்ரோன்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார்பெட் புலிகள் காப்பகத்தில் பெண்களை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படும் கேமரா ட்ரோன்கள்
    இந்த ஆய்வு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது

    கார்பெட் புலிகள் காப்பகத்தில் பெண்களை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படும் கேமரா ட்ரோன்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 25, 2024
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரபலமான ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தில், வன விலங்குகளைப் பாதுகாக்க கேமரா பொறிகள், ட்ரோன்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் பொருத்தப்பட்டிருந்தது.

    இருப்பினும், அவை அதற்கான உண்மையான தேவையை தாண்டி தவறான வழிக்கு பயன்படுத்தப்படுகிறது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கிராம ஆண்களால், வளங்களை சேகரிக்கவும் மற்றும் ஓய்வுக்காகவும் காட்டிற்குச் செல்லும் பெண்களை, அவர்கள் அறியாமலேயே குறிவைத்து இந்த கேமராக்கள் பயன்படுத்தியதாகக் கண்டறிந்துள்ளனர்.

    இந்த பெண்கள் பெரும்பாலும் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

    இந்த ஆய்வு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    வனத்திற்குள் பெண்கள்

    வனத்திற்குள் பெண்கள் சுள்ளிகளை, கட்டைகளை பொறுக்க செல்வதாக கூறுகின்றனர்

    வனத்திற்குள் சுள்ளி சேகரிப்பது சட்டப்படி குற்றமில்லை என்றாலும், வனப் பாதுகாவலர்கள் பெண்களைக் காடுகளுக்குள் இருந்து விரட்ட பறக்கும் ட்ரோன்களை பயன்படுத்துகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

    வீட்டில் கழிவறை இல்லாத பெண்கள் சிலரும் காட்டிற்குள் செல்வது வழக்கம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணை படம் பிடித்த கேமராவின் வீடியோ அதன் பின்னர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டது எனவும் ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    இந்த கேமரா பதிவுகள் எதுவுமே பெண்களின் முன் அனுமதியின்றி எடுக்கப்படுவதால், பல நேரங்களில் அவை தவறாக பயன்படுத்தக்கூடும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

    கேமரா பொறிகளை தவறாக பயன்படுத்தியதால் கோபமடைந்த கிராமவாசிகளில் ஒரு பகுதியினர், சில சமயங்களில் அவற்றை எரித்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம்  விபத்து
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது விபத்து
    ஒரு வாரத்திற்கு மேலாக, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? விபத்து
    உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்? மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025