NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
    தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைப்பு

    கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    எழுதியவர் Nivetha P
    Nov 04, 2023
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக சுகாதாரத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்துள்ளார்.

    இதுகுறித்த மனுவில், "மழைக்காலங்களில் அதிகரிக்கும் கொசுக்கள் காரணமாக டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல நோய் தொற்றுகள் ஏற்படுகிறது" என்றும்,

    "எனவே இந்த கொசுக்களை தொழில்நுட்பம் மற்றும் மருந்துகள் கொண்டு அழிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 2022ம் ஆண்டு அக்.,26ல் நடந்த இதுகுறித்து உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணையில், 'கொசுக்களை அழிக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள ரசாயனங்களால் வேறு நோய்கள் ஏற்படுவதன் காரணமாக சுகாதாரத்துறை பரிந்துரைப்படி சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத கொசு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    வழக்கு 

    போதிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவு 

    இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'தொடர்ந்து கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்' என்றுக்கூறி உத்தரவிட்டதாகவும் ரமேஷ் தற்போதைய நீதிமன்ற அவமதிப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அவர், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தற்போது நோய் தொற்றும் அதிகரித்துள்ளது.

    இதனால் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றாத சுகாதாரத்துறை செயலர் மீதும், நகராட்சி குடிநீர் வழங்கல்துறை செயலர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கொசு ஒழிப்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது' என்று கூறியுள்ளனர்.

    மேலும்,'நீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிறைவேற்றியதா?இல்லையா? என்பதை உறுதிச்செய்யும் வகையில் மனுதாரர் வரும் நவ.,24ம்.,தேதிக்குள் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உயர்நீதிமன்றம்
    தமிழக அரசு
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    தமிழக அரசு

    ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை  அமலாக்க இயக்குநரகம்
    பற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி திருநெல்வேலி
    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு  கர்நாடகா
    சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு  தமிழ்நாடு

    சுகாதாரத் துறை

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா இந்தியா
    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025