NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்
    காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பெரிய கட்சி கூட்டத்திற்காக ராய்ப்பூருக்கு ஒன்றாக சென்று கொண்டிருந்தனர்.

    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 23, 2023
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று(பிப் 23) காலை விமானம் மூலம் செல்ல இருந்த காங்கிரஸ் தலைவர் பவன்-கேரா தடுத்து நிறுத்தப்பட்டார்.

    இதனால், ஏராளமான கட்சித் தலைவர்கள் விமானத்திற்கு அடுத்துள்ள டார்மாக்கில் ஒரு அரிய போராட்டத்தைத் தொடங்கினர்.

    கட்சித் தலைவர்கள் விமானத்தில் ஏறிய பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் பவன்-கேரா, போர்டிங் பாஸ் இருந்தபோதிலும், இண்டிகோ விமானத்தில் இருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பெரிய கட்சி கூட்டத்திற்காக ராய்ப்பூருக்கு ஒன்றாக சென்று கொண்டிருந்தனர்.

    பிரதமர் மோடியை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பாஜக தலைவர் ஒருவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து கேரா மீது FIR பதிவு செய்யப்பட்டிருந்தது.

    டெல்லி

    பவன் கேராவை கைது செய்ய அசாம் போலீஸ் வந்ததா?

    "என்னிடம் கையில் மட்டுமே பேக்கேஜ் இருந்தது. ஆனால், அவர்கள் எனது பேக்கேஜ்களில் சிக்கல் இருப்பதாக கூறினர். மேலும், என்னால் பயணம் செய்ய முடியாது என்றும் கூறினார்கள். பின்னர் டிசிபி(துணை போலீஸ் கமிஷனர்) உங்களை சந்திப்பார் என்றார்கள். நான் ரொம்ப நேரமாக காத்திருக்கிறேன். சட்டம் ஒழுங்குக்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று பவன் கேரா கூறியுள்ளார்.

    இதனையடுத்து, ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி டெல்லி விமான நிலைய டார்மாக்கில் கோஷங்களை எழுப்பியும், விமானத்தின் அருகே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    கைது வாரண்ட் இல்லாமல் பவன் கேரா நிறுத்தப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அவரை கைது செய்வதற்காக அசாம் போலீஸ் குழு விமான நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் வேங்கை வயல்
    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை கேரளா
    ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவு! அதானி மதிப்பு மேலும் சரிவு தொழில்நுட்பம்
    10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! இங்கே ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025