NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்
    இந்தியா

    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்

    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 23, 2023, 01:32 pm 1 நிமிட வாசிப்பு
    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்
    காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பெரிய கட்சி கூட்டத்திற்காக ராய்ப்பூருக்கு ஒன்றாக சென்று கொண்டிருந்தனர்.

    டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று(பிப் 23) காலை விமானம் மூலம் செல்ல இருந்த காங்கிரஸ் தலைவர் பவன்-கேரா தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால், ஏராளமான கட்சித் தலைவர்கள் விமானத்திற்கு அடுத்துள்ள டார்மாக்கில் ஒரு அரிய போராட்டத்தைத் தொடங்கினர். கட்சித் தலைவர்கள் விமானத்தில் ஏறிய பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் பவன்-கேரா, போர்டிங் பாஸ் இருந்தபோதிலும், இண்டிகோ விமானத்தில் இருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பெரிய கட்சி கூட்டத்திற்காக ராய்ப்பூருக்கு ஒன்றாக சென்று கொண்டிருந்தனர். பிரதமர் மோடியை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பாஜக தலைவர் ஒருவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து கேரா மீது FIR பதிவு செய்யப்பட்டிருந்தது.

    பவன் கேராவை கைது செய்ய அசாம் போலீஸ் வந்ததா?

    "என்னிடம் கையில் மட்டுமே பேக்கேஜ் இருந்தது. ஆனால், அவர்கள் எனது பேக்கேஜ்களில் சிக்கல் இருப்பதாக கூறினர். மேலும், என்னால் பயணம் செய்ய முடியாது என்றும் கூறினார்கள். பின்னர் டிசிபி(துணை போலீஸ் கமிஷனர்) உங்களை சந்திப்பார் என்றார்கள். நான் ரொம்ப நேரமாக காத்திருக்கிறேன். சட்டம் ஒழுங்குக்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று பவன் கேரா கூறியுள்ளார். இதனையடுத்து, ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி டெல்லி விமான நிலைய டார்மாக்கில் கோஷங்களை எழுப்பியும், விமானத்தின் அருகே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கைது வாரண்ட் இல்லாமல் பவன் கேரா நிறுத்தப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அவரை கைது செய்வதற்காக அசாம் போலீஸ் குழு விமான நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    டெல்லி

    இந்தியா

    ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல் காங்கிரஸ்
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம் தொழில்நுட்பம்
    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்

    டெல்லி

    போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி தொழில்நுட்பம்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஆம் ஆத்மி
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் ஏர் இந்தியா
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி நிதியமைச்சர்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023