NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ்
    இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் மோடியின் அரசாங்கம் பதவி விலக வேண்டி இருக்கும்.

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2023
    11:15 am

    செய்தி முன்னோட்டம்

    மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வது என்பது மத்திய அரசின் பெரும்பான்மைக்கு எதிர்க்கட்சிகள் விடும் சவாலாகும்.

    இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவி விலக வேண்டி இருக்கும்.

    இது முறையாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால், மக்களவை சபாநாயகர் அதை சபையில் வாசித்து காட்டுவார்.

    பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவான உறுப்பினர்களை அவரவர் இடத்தில் எழுந்து நிற்குமாறு கேட்டுக் கொள்வார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 50 பேர் எழுந்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போய்

     பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதறகான ஒரு உத்தி 

    இதற்கிடையில், பாரத ராஷ்டிர சமிதி(BRS) கட்சி தலைவர் நாகேஸ்வர ராவ்வும் ஒரு தனி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம், குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடையும் என்றாலும், மணிப்பூர் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போட்டு கருத்துப் போரில் வெற்றி பெறுவோம் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.

    இது பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதறகான ஒரு உத்தி என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

    மேலும், 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    மக்களவை
    நாடாளுமன்றம்
    பாஜக

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    காங்கிரஸ்

    பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி இந்தியா
    'மோடி அரசு எனது மொபைலை ஒட்டு கேட்கிறது': ராகுல் காந்தி குற்றச்சாட்டு  ராகுல் காந்தி
    சுயமரியாதை மாதம்: LGBTQIA+ சமூகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு  இந்தியா
    மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர்  தமிழ்நாடு

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    நாடாளுமன்றம்

    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு டெல்லி
    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை இந்தியா
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி

    பாஜக

    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்
    பள்ளி பாடபுத்தங்களில் இருந்து RSS நிறுவனரின் அத்தியாயங்களை நீக்கியது கர்நாடக அரசு கர்நாடகா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  ராஜ்நாத் சிங்
    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025