NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு 
    இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 25, 2023
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    2003ல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(பாஜக கூட்டணி) அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    INDIA கூட்டணி கட்சிகளில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜகவுக்கு எப்படி முட்டுக்கட்டை போடுவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றன.

    மணிப்பூரில் நிலவும் அமைதியின்மை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

    பிஹபி

    மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது 

    அந்த கோரிக்கையை நடைப்பமுறைப்படுத்துவதற்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் உதவும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சலசலப்பு நிலவி வரும் நிலையில், இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

    மணிப்பூர் நிலைமை குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

    இதனையடுத்து, ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளையும் ஒத்திவைத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகள்
    பாஜக
    மத்திய அரசு

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    நாடாளுமன்றம்

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா
    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி
    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு டெல்லி
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு இந்தியா

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பாஜக
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  பாஜக
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  சோனியா காந்தி

    பாஜக

    பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி  கர்நாடகா
    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்
    பள்ளி பாடபுத்தங்களில் இருந்து RSS நிறுவனரின் அத்தியாயங்களை நீக்கியது கர்நாடக அரசு கர்நாடகா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  ராஜ்நாத் சிங்

    மத்திய அரசு

    5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது  இந்தியா
    ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம் ரிசர்வ் வங்கி
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    நாட்டிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் கன்றினை ஈன்ற பசு  மாநில அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025