NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை 
    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை

    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை 

    எழுதியவர் Nivetha P
    Dec 11, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.

    இந்த கடையில் கடந்த நவ.,27ம்தேதி நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்தது.

    அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், சிசிடிவி ஆய்வு மூலம் கொள்ளையன் தனது முகத்தை சட்டை கொண்டு மூடியபடி கொள்ளையடித்த நகைகளோடு வெளியில் வந்த பதிவு கண்டறியப்பட்டது.

    மேலும் 4.8 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.

    பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் பெயர் விஜய் என்பதும் அவர் தருமபுரியை சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    விஜய் தலைமறைவான பட்சத்தில், அவரது மனைவி நர்மதா மற்றும் மாமியார் யோகராணி உள்ளிட்டோரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.

    கொள்ளை 

    கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ய முடிவு 

    இதன்படி கடந்த 30ம்.,தேதி மனைவி நர்மதாவிடம் விசாரணை நடத்திய தனிப்படை காவல்துறையினர் 3.2 கிலோ நகைகளை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தருமபுரியில் தும்பலஹள்ளி என்னும் பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாமியார் யோகராணியிடமும் விசாரணை நடத்தப்பட்டு 1.35 கிலோ நகைகள் பறிமுதல் செய்ததோடு அவரை கைதும் செய்துள்ளனர்.

    கிட்டத்தட்ட 95%நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஆந்திரா, காளஹஸ்தியில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்ட கன்னி சாமி வேஷத்தில் விஜய் இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இந்நிலையில் காளஹஸ்தியில் இருந்து சென்னை திரும்பும் வழியில் விஜயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அவரிடமிருந்து 400கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கோவைக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    காவல்துறை
    காவல்துறை
    கோவை

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    கைது

    என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி  ஆந்திரா
    பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம்  ஆந்திரா
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி

    காவல்துறை

    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை
    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்  ஆந்திரா
    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை

    காவல்துறை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  சபரிமலை
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு விபத்து
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்

    கோவை

    தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழக அரசு
    TNPL 2023 : முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்திய சாய் சுதர்சன் டிஎன்பிஎல் 2023
    கோவையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு  விஜய்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025