தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இன்று தேசிய பத்திரிகை தினம். இது சார்பாக பத்திரிகை துறையினருக்கும், ஊடகத்துறையினருக்கும், தமிழக முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) பதிவு ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், "தேசிய பத்திரிக்கை தினமன்று, உண்மையான பத்திரிகை என்பது துடிப்பான ஜனநாயகத்தின் கண்காணிப்பு நாயாக இருப்பதால், ஊடகங்களின் சக்தி மற்றும் பொறுப்பு பற்றி சிந்திப்போம். சிலர் அரசியல் அழுத்தத்திற்கு அடிபணியும் சமயங்களில், பக்கச்சார்பற்ற அறிக்கையிடல் உணர்வை ஊக்குவிப்போம் மற்றும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்துவோம்" என பதிவிட்டுள்ளார். நாட்டில் செய்தி ஊடகங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படும் இந்திய பத்திரிகை கவுன்சில் நிறுவப்பட்டதன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.