Page Loader
கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி
2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2024
04:36 pm

செய்தி முன்னோட்டம்

கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் பதிவின்படி, "கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத்தரத்திலான கிரிக்கெட் திடல், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்" எனத்தெரிவித்துள்ளார். இதனை முன்னதாக முன்மொழிந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,"சென்னை எம்.ஏ. சிதம்பரம் திடலை அடுத்து, தமிழ்நாட்டின் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது விளங்கும். நமது திராவிட மாடல் அரசும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் திறமையாளர்களை வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

embed

சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்

As a sports and cricket enthusiast, I would like to add one more promise to our election manifesto for #Elections2024: 🏏🏟️ We will take efforts to establish a state-of-the-art cricket stadium in Coimbatore, with the active participation of the sports loving people of... https://t.co/B6rpHJKSBI— M.K.Stalin (@mkstalin) April 7, 2024