இன்றைய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
செய்தி முன்னோட்டம்
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதம் நடந்ததாக தகவல் வந்துள்ளது.
முடிவுகள்
பட்டா, புதிய தொழில்முனைவோர்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன
சென்னை மற்றும் பிற 4 மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பட்டா மாற்றமறுக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது.
சென்னையில் 29,000 பேருக்கு பட்டா வழங்க திட்டம் மசோதா செய்யப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.
இதனால் 86,000 பேர் பயனடைய உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில், 10.25 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நீர்நிலை புறம்போக்கு இடங்களில் பட்டா வழங்க முடியாது.
நில உரிமையாளர்களுக்கு 6 மாதத்திற்குள் புதிய பட்டா மாற்றி வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறியுள்ளார்.
6 மாதத்திற்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய தொழில்முனைவோர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை குற்றமாக காட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசிக்காமல் வெளியேறினார்.
அதன் பின்னர், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது.
அதற்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார்.
மொத்தமாக 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இதன் பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.