NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள் 
    தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள்

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள் 

    எழுதியவர் Nivetha P
    May 01, 2023
    05:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தற்போது வரை அழகுற காட்சியளிக்கிறது.

    இந்த கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி தேரோட்டம் நடந்தது.

    அதனை தொடர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் இங்கு சித்திரை திருவிழா நடைபெற துவங்கியதாக கூறப்படுகிறது.

    அதன்படி இந்தாண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    அதன்படி இந்த விழாவினையொட்டி சாமியின் வீதி உலா 4 ராஜ வீதிகளில் நடந்து வருகிறது.

    கொடியேற்றிய தினத்தில் இருந்தே தினமும் சுவாமி, அம்மன் சிம்ம வாகனம், மூஞ்சுறு வாகனம், மேஷ வாகனம், வெள்ளி மயில் வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது குறிப்பிடவேண்டியவை.

    தேரோட்டம்

    பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்

    இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(மே.,1) காலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    இந்த தேரோட்டத்தினையொட்டி அதிகாலை 5 மணிக்கு முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தது.

    பின்னர் 6 மணியளவில் கமலாம்பாள் சமேத தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளினார்.

    விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி, நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளினர். இவற்றையடுத்து காலை 6.50 தேரோட்டமானது துவங்கியது.

    வண்ணமலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட 16அடி உயரம், 18அடி அகலம் கொண்ட அத்தேரினை ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தார்.

    அதனைதொடர்ந்து பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர், திரளாக அங்குக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பரவசம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தஞ்சை பெரிய கோவில்
    திருவிழா

    சமீபத்திய

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா

    தஞ்சை பெரிய கோவில்

    தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை தமிழ்நாடு
    தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தமிழ்நாடு
    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம் தமிழ்நாடு
    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம்  தமிழ்நாடு

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025