NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது': இந்திய தலைமை நீதிபதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது': இந்திய தலைமை நீதிபதி 

    'நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது': இந்திய தலைமை நீதிபதி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2024
    03:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று நீட்-யுஜி தேர்வு 2024 தொடர்பான மனுக்களை விசாரித்த போது, ​​வினாத்தாள் கசிந்தது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்

    மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று தொடங்கியது.

    கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்ததால், அந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக நடத்த வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மற்றும் இதர மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நாடு தழுவிய தேர்வு தொடர்பான 38 மனுக்களை பரிசீலித்து வருகிறது.

    இந்தியா 

    நீட் தேர்வு சரியாக நடத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு 

    தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தேர்வை நடத்துவதற்கான நிலையான நடைமுறையை பின்பற்றவில்லை என்று சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

    வினாத்தாள் கசிவு ஏற்பட்டதில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதனையடுத்து, இந்தியா முழுவதும்உள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இதனால் அரசியலிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதை இன்று விசாரித்த இந்திய தலைமை நீதிபதி, "வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என்பதும், தேர்வின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது." என்று கூறியுள்ளார்.

    மேலும், நீட்வினாத்தாள் எங்கெல்லாம் சென்றது, யாரெல்லாம் அதை கையாண்டார்கள் என்பது குறித்தும் கேள்வி எழுப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    நீட் தேர்வு

    நீட் தேர்வு: மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவோரின் ஆதிக்கம் தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம் தமிழகம்
    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்  ஆர்.என்.ரவி
    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள்  திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025