NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம் 
    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 17, 2023
    07:30 pm
    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம் 
    தோராயமாக, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர் வாழ்கின்றனர்.

    இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது. செப்டம்பர் 2018இல், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தண்டனைச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவு 377இன் சில பகுதிகளைத் நீக்கி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமற்றது என்று கூறியது. "LGBT மக்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்கொண்ட இழிவுகளுக்கு வரலாறு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அப்போது உச்ச நீதிமன்றம், பால்புதுமையினர்(LGBTQIA+) எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு வருத்தம் தெரிவித்திருந்தது. அதுவரை தன்பாலின ஈர்ப்பாளர்களாக பிறந்தவர்கள் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.

    2/2

    தன் பாலின ஈர்ப்பு ஒரு நோயல்ல: இந்திய மனநல சங்கம்

    1975களுக்கு முன் உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களை மனநல குறைபாடுகள் உள்ளவர்களாக கருதினர். அதன்பிறகு, ஏற்பட்ட தொழிநுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சியால், தன் பாலின ஈர்ப்பு என்பது இயற்கையான ஒரு விஷயம் என்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அது ஒரு மனநல குறைபாடு அல்ல என்று உலக அறிஞர்கள் ஏற்றுக்கொண்டனர். "தன் பாலின ஈர்ப்பு ஒரு நோயல்ல" என்று ஒரு வாரத்திற்கு முன் இந்தியாவின் முன்னணி மனநலக் குழுவான இந்திய மனநல சங்கம்(IPS) ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. தோராயமாக, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர் வாழ்கின்றனர். நாட்டையே திருப்பி போடும் ஒரு முக்கிய தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்க இருக்கும் நிலையில், மொத்த உலகின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    தன்பால் ஈர்ப்பாளர்கள்
    உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    பிரேசில் பாரா பேட்மிண்டன் ஓபன் 2023 : 24 பதக்கங்களை வாரிக் குவித்த இந்தியா இந்திய அணி
    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்! குஜராத்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி?  ஸ்மார்ட்போன்

    தன்பால் ஈர்ப்பாளர்கள்

    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  இந்தியா
    #LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள் காதலர் தினம்
    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   இந்தியா
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி  தமிழ்நாடு
    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023