NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் 
    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்

    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 25, 2023
    01:42 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்ஜா லூகா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா பல்கலைக்கழங்களின் மூத்த உதவி பேராசிரியராகவும், 'கூகுள்' நிறுவன சாப்ட்வேர் எஞ்சினியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக்.

    செர்பியா நாட்டில் செயல்பட்டு வரும் 'நம்பியோ' என்னும் தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் இவர் உள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இவர் தனது 'நம்பியோ' நிறுவனம் மூலம் உலகம் முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    அதன்படி இந்த ஆய்வானது, பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு சூழல், முன்னதாக நடத்தப்பட்ட இதுபோன்ற ஆய்வுகளின் முடிவுகள் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.

    பட்டியல் 

    சந்தோஷத்தில் ஆழ்ந்த சென்னை காவல்துறை 

    இந்நிலையில், லேடன் அடமோவிக் மேற்கொண்ட ஆய்வு முடிவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் இந்தியளவில் முதல் இடத்தையும், உலகளவில் 127வது இடத்தினையும் பிடித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனை தொடர்ந்து இந்த தகவல் சென்னை மாநகர காவல்துறையை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், 'சென்னை மக்களை பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் தங்களை அர்ப்பணித்து பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை பெருமிதத்தோடு கூறி கொள்கிறேன்' என்று பேசியுள்ளார்.

    இதனிடையே இந்தாண்டின் துவக்கத்தில், 'அவ்தார்' என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் சென்னை பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான நகரம் என்று 78.4 புள்ளிகள் பெற்று இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    உலகம்
    சென்னை
    காவல்துறை

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    கூகுள்

    வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள் வணிகம்
    AR ஹெட்செட் உருவாக்கும் திட்டத்தை கைவிடும் கூகுள், அடுத்து என்ன? மெட்டா
    பிங் தேடுபொறியுடன் இணைய வசதியைப் பெறும் சாட்ஜிபிடி சாட்ஜிபிடி
    கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன தொழில்நுட்பம்

    உலகம்

    இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அமெரிக்கா
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை  பாகிஸ்தான்
    இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி இஸ்ரேல்

    சென்னை

    சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை  சேலம்
    சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு
    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம் தமிழிசை சௌந்தரராஜன்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு

    காவல்துறை

    சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு இந்தியா
    திருப்பதி மலையில் இலவசமாக இயக்கப்படும் பேட்டரி பேருந்து திருடுபோனதால் பரபரப்பு  காவல்துறை
    தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    'ஆண்டி' என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்த பெங்களூரு பெண் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025