NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள் 
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள் 

    எழுதியவர் Nivetha P
    Sep 30, 2023
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நேற்று(செப்.,29) இரவு கனமழை பெய்தது.

    இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட வந்தவர்கள், மழைக்காக ஒதுங்கியவர்கள் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

    அப்போது எதிர்பாரா விதமாக அந்த பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்துள்ளது.

    இதில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து விரைந்த தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், 19 பேர் படுகாயங்களோடு மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து 

    பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழப்பு 

    அதன்படி, சிகிச்சை பெற்றுவந்த 19 பேரில் 7 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதனிடையே இந்த விபத்தில் 53 வயதான கந்தசாமி என்பவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இவர் அந்த பெட்ரோல் பங்க்'ன் ஊழியராவார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தினை ஏற்படுத்தியது.

    விபத்துக்குள்ளான பங்க்'கின் உரிமையாளர் அசோக் மற்றும் மேலாளர் வினோத் மீது சைதாப்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மேலும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விபத்து ஏற்பட்ட இடத்தினை தற்போது மூடி சீல் வைத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெட்ரோல்
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பெட்ரோல்

    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்
    நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை  மத்திய அரசு
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு
    2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம் 2024 மக்களவை தேர்தல்

    சென்னை

    தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு மத்திய அரசு
    கோயம்பேடில் காய்கறி விலை சரிவு; மக்கள் மகிழ்ச்சி  இந்தியா
    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு திருச்சி
    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அரசு மருத்துவமனை

    காவல்துறை

    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்

    காவல்துறை

    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025