NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு 
    அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 02, 2023
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் இரண்டாம் ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்த பவுசியா என்ற மாணவியை அவரது காதலர் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த 20 வயதான பவுசியா, ஆஷிக்(20) என்ற நபரை 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    ட்ஜ்வ்க்ள்

    டி-ஷர்ட்டால் தனது காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற ஆஷிக்

    பவுசியா, குரோம்பேட்டையில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் ஆஷிக் சென்னைக்கு வந்ததை அடுத்து, அஷிக்கும் பவுசியாவும் குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கின்றனர்.

    அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆஷிக் தன் டி-ஷர்ட்டால் தனது காதலியின் கழுத்தை நெரித்து கொன்றார்.

    ட்ஜ்வ்கின்ள

    ஆஷிக் எப்படி சிக்கினார்?

    அதன் பிறகு, பவுசியாவின் உயிரற்ற உடலை புகைப்படம் எடுத்த அவர், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அந்த படத்தை வைத்திருக்கிறார்.

    அந்த ஸ்டேட்டஸை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவுசியாவின் தோழிகள், உடனடியாக போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தப்பி செல்ல முயன்ற ஆஷிக்கை கைது செய்தனர்.

    அதனையடுத்து நடந்த விசாரணையின் போது. ஆஷிக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜன்னல்

    16 வயதில் குழந்தை பெற்று கொண்ட ஆஷிக்-பவுசியா ஜோடி 

    விசாரணையில் மேலும் சில முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளது.

    5 வருடமாக காதலித்து வந்த ஆஷிக்-பவுசியா ஜோடி, 16 வயதிலேயே சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டனராம்.

    அதன் பிறகு, அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது.

    அதனையடுத்து, 18 வயதுக்கு கீழுள்ள பெண்ணை திருமணம் செய்ததால், ஆஷிக் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும், அவர்களது குழந்தையை அதிகாரிகள் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    உவ்ட்வ்

    வேறு பெண்களுடனும் தொடர்பு வைத்திருந்த ஆஷிக் 

    அண்மையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஷிக், பவுசியாவை தொடர்ந்து சந்தித்து பேசி வந்திருக்கிறார்.

    பவுசியாவை தவிர வேறு சில பெண்களுடனும் ஆஷிக் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சென்னை வந்த ஆஷிக், பவுசியாவுடன் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார்.

    அப்போது, வேறு பெண்களின் புகைப்படங்களை ஆஷிக்கின் மொபைலில் பார்த்த பவுசியா, தனது காதலனுடன் சண்டையிட்டிருக்கிறார்.

    அந்த தகராறின் போது கோபமடைந்த ஆஷிக், தன் டி-ஷர்ட்டால் தனது காதலியின் கழுத்தை நெரித்து கொன்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    இந்தியா
    கொலை
    கேரளா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சென்னை

    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை
    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை
    சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு! மன்சூர் அலிகான்
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா

    இந்தியா

    16 வயதில் வில்வித்தையில் உலகின் நம்பர் 1 வீராங்கனை; கைகளற்ற ஷீத்தல் தேவியின் அசரவைக்கும் பின்னணி வில்வித்தை
    400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது? உத்தரகாண்ட்
    உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் IAF விமானத்தில் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு பயணம்  உத்தரகாண்ட்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா

    கொலை

    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் காவல்துறை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கைது
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்

    கேரளா

    மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கே.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாள்  பினராயி விஜயன்
    திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன? திருவனந்தபுரம்
    மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள் திருமணம்
    கூட்டத்தில் ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்  லோகேஷ் கனகராஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025