NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம்
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Mar 12, 2023
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக பல பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

    அண்மையில் சென்னை பெருங்குடியில் வசித்துவந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தினை இழந்த காரணத்தினால் தனது மனைவி, இரு மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

    அதேபோல், சென்னை அண்ணாநகரில் வசித்த ரகுவரன் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார்.

    இந்த இரண்டு தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுகளுக்கு தடைவிதித்து, அதனை ரத்து செய்யவேண்டும் என மும்பையை சேர்ந்த 24*7 கேம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளது.

    அந்த நிறுவனம் அளித்த மனுக்களில், காவல்துறை கேட்ட விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளித்த நிலையிலும், காவல்துறை உள்நோக்குடன் பொத்தாம்பொதுவாக விசாரணையினை மேற்கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    விசாரணை ஒத்திவைப்பு

    விசாரணை என்னும் பெயரில் துன்புறுத்துவதாக குற்றசாட்டு

    மேலும் தாங்கள் பணம் வைத்து விளையாட யாரையும் வற்புறுத்தவில்லை என்றும் ரம்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதனைதொடர்ந்து, ரம்மி தடை சட்டத்தை தடைசெய்யும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக விசாரணை என்னும் பெயரில் துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    அதேபோல், 2017ம்ஆண்டிற்கு பிறகு மணிகண்டன் தங்கள் தளத்தில் விளையாடவில்லை என்றும், 5 ஆண்டுகளுக்கு பிறகே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி ஜி.சந்திரசேகரன், விசாரணைக்காக தகவல்களை கேட்டு மட்டுமே சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

    தொடர்ந்து, இதுகுறித்து சிபிசிஐடி, டிஜிபி காவல்துறை, தமிழக அரசு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை மார்ச் 14ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் இந்தியா
    வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8 வானிலை அறிக்கை
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் நாகர்கோவில்
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை சென்னை

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025