NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

    எழுதியவர் Nivetha P
    Mar 04, 2023
    03:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    சென்னை மேடவாக்கம் கணபதி காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்.

    மருத்துவ நிறுவனத்தில் பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.20 லட்சம் கடன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    கடன் வாங்கிய பணத்தினை அவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் வைத்து விளையாடியுள்ளார். இதற்கிடையே லோன் கொடுத்த ஆப்களில் இருந்து பணத்தினை கட்ட சொல்லி அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் சூதாட்டங்களில் வைத்து விளையாடிய பணமான ரூ.20 லட்சம் வரையிலான தொகையினையும் அவர் இழந்துள்ளார்.

    ரூ.20 லட்சம் இழப்பு

    வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வினோத் குமார்

    ரூ.20 லட்ச பணத்தினையும் இழந்து லோன் கட்ட முடியாமல் வினோத் குமார் கடும் மனவுளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனையடுத்து வினோத் குமார் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இது போன்ற சூதாட்டங்கள் மற்றும் ஆன்லைன் ஆப் மூலம் மக்களுக்கு ஆசை காண்பித்து கடன் வழங்கும் நிறுவனங்களால் தற்கொலைகள் தற்போது அதிகரித்து வருகிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    சென்னை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு மு.க ஸ்டாலின்
    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு தமிழ்நாடு
    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் ஈரோடு
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு தமிழ் திரைப்படம்
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 24- பிப்ரவரி 28 வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025