NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

    எழுதியவர் Nivetha P
    Mar 04, 2023
    03:33 pm
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சென்னை மேடவாக்கம் கணபதி காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். மருத்துவ நிறுவனத்தில் பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.20 லட்சம் கடன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடன் வாங்கிய பணத்தினை அவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் வைத்து விளையாடியுள்ளார். இதற்கிடையே லோன் கொடுத்த ஆப்களில் இருந்து பணத்தினை கட்ட சொல்லி அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் சூதாட்டங்களில் வைத்து விளையாடிய பணமான ரூ.20 லட்சம் வரையிலான தொகையினையும் அவர் இழந்துள்ளார்.

    2/2

    வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வினோத் குமார்

    ரூ.20 லட்ச பணத்தினையும் இழந்து லோன் கட்ட முடியாமல் வினோத் குமார் கடும் மனவுளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து வினோத் குமார் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது போன்ற சூதாட்டங்கள் மற்றும் ஆன்லைன் ஆப் மூலம் மக்களுக்கு ஆசை காண்பித்து கடன் வழங்கும் நிறுவனங்களால் தற்கொலைகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    தமிழ்நாடு

    சென்னை

    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் பாடகர்
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது சமூக வலைத்தளம்
    தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் நாகர்கோவில்
    வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8 வானிலை அறிக்கை
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன் காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023