NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2025
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக கடலோரப் பகுதிகளில் நடந்த சட்டவிரோத தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடந்த இந்த சட்டவிரோத தாது மணல் கொள்ளையால் அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் பொது நல வழக்காகத் தாக்கல் செய்திருந்தார்.

    விசாரணையில் விவி மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் உள்ளிட்ட ஏழு தனியார் நிறுவனங்களுக்கு 64 தாது மணல் அள்ள உரிமங்கள் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    எனினும், 2013 ஆம் ஆண்டு அரசு இதற்கு தடை விதித்த போதிலும், சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பது தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ₹5,832.44 கோடி நிதி இழப்பு ஏற்பட்டது.

    தாது மணல் மீட்பு

    தாது மணலை மீட்க திட்டம்

    இந்தத் தொகையை தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டு, 1.55 மில்லியன் டன் தாது மணலை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும், ஆய்வுகளில் 2018 மற்றும் 2022க்கு இடையில் மட்டும் 1.6 மில்லியன் டன் மணலும் 6,449 டன் மோனசைட்டும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அணுசக்திக்கு முக்கியமான வளமான மோனசைட்டை தனியார் வெட்டி எடுக்கவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ முடியாது என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

    இந்நிலையில், சட்டவிரோதமாக வெட்டி எடுத்தது மற்றும் கடத்தியதற்கு போதுமான ஆதாரங்களை நீதிமன்றம் கண்டறிந்தது.

    இதையடுத்து தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை அது உறுதி செய்தது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கனிமங்களை உடனடியாக மத்திய அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

    அதிகாரிகள் தொடர்பு

    தமிழக அதிகாரிகளின் தொடர்பு குறித்து விசாரணை

    கூடுதலாக, இந்த தாது மணல் கொள்ளையில் தமிழக அதிகாரிகளின் ஈடுபாடு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும், மாநில காவல்துறையில் இதுகுறித்து உள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன்படி, நான்கு வாரங்களுக்குள், தமிழ்நாடு காவல்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும், இதில் உள்ள அரசியல் தொடர்புகளை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் நிதிகளை முழுமையாக மதிப்பாய்வு செய்ய அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித் துறைக்கும் உத்தரவிடப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    சிபிஐ
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சென்னை உயர் நீதிமன்றம்

    அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம்
    சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் பொன்முடி
    பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் வழக்கு: திருநங்கை அப்சராவிற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு  யூடியூபர்
    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ராமர் கோயில்

    சிபிஐ

    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சபரிமலை
    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம் காங்கிரஸ்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு  ஜெயலலிதா

    தமிழகம்

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார் திமுக
    ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை இடைத்தேர்தல்
    தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு

    வேங்கை வயல் சம்பவத்தில் அவதூறு பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல் வேங்கை வயல்
    ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு குடியரசு தினம்
    76வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025