Page Loader
தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2024
04:04 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அபராதம் மட்டுமே போதாது, கூடுதலாக உரிமத்தையும் ரத்து செய்யலாமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கினை, தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை எனக்குறிப்பிட்டு, அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

embed

அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

#BREAKING | அதிக கட்டணம்- நடவடிக்கை எடுக்க ஆணை#ChennaiHighCourt | #TNGovt | #PrivateBus pic.twitter.com/p75TulSI2A— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 23, 2024