NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் 
    சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் தேங்கிய காரணம்?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

    சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Nov 30, 2023
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நேற்று(நவ.,29) மாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மேற்கு மாம்பலம், அம்பத்தூர், அண்ணாநகர், தியாகராய நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, சென்னையில் 145 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது.

    ஒருசில இடங்களில் தண்ணீர் வடிகால்களில் உள்வாங்காத காரணத்தினால் நீர் தேக்கமடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்கள் மீதான உடனடி நடவடிக்கைகள் அனைத்துமே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் சென்னையில் மீட்புப்பணியில் களமிறங்க கமாண்டோ படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    மழை 

    மழைநீர் தேக்கம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்

    மேலும் செம்பரப்பக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீர் அடையாறில் அதிகம் வருவதால், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வடிகால்களில் செல்லும் நீர் கடலில் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாகவே நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    விரைவில் அந்த தண்ணீர் வடிந்தோடும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

    இவரையடுத்து, பேட்டியளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியம், "நேற்று காலை முதல் சென்னையில் பெய்ய துவங்கிய நிலையில் 10 செ.மீ., முதல் 25 செ.மீ.,அளவிலான மழை பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ள அவர்,

    'கால்வாய்கள் தூர்வாரப்பட்ட காரணத்தினால் சென்னையில் பெருமளவு வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது' என்றும் கூறியுள்ளார்.

    ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீரும் விரைவில் வடிந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி 

    #WATCH | சென்னை: மேற்கு மாம்பலத்தில் பெய்த கன மழையால் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் வடிந்துவிடும். தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!#SunNews | #ChennaiRains | #WestMambalam | #MaSubramanian pic.twitter.com/yKLJHQI9hH

    — Sun News (@sunnewstamil) November 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கனமழை
    வெள்ளம்

    சமீபத்திய

    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    சென்னை

    இனி சென்னையில் போன்பே மூலமே மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும், எப்படி? போன்பே
    ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல் சென்னை உயர் நீதிமன்றம்
    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை தமிழக அரசு
    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்

    கனமழை

    கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்  வெள்ளம்
    தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்
    தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு மழை
    'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம் சென்னை

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025