NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம்

    சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 12, 2024
    10:49 am

    செய்தி முன்னோட்டம்

    புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மார்ச் 14 முதல், பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தில் செல்ல முடியும்.

    இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-எஸ்எம்விடி பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(ரயில் எண் 20664) சென்னையில் இருந்து காலை 09.15 மணிக்குப் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை 14.20 மணிக்கு பெங்களூருவை சென்றடையும். இடையில், இது காட்பாடி மற்றும் கிருஷ்ணராஜபுரத்தில் நிறுத்தப்படும்.

    புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுவதால், வழக்கமான சேவை மார்ச் 14ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

    சென்னை-பெங்களூரு-மைசூரு ரயில் தடத்தில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுவாகும்.

    இந்தியா 

    சென்னை-மைசூரு வந்தே பாரத் இயங்கும் நேரங்கள் 

    முதலில், ஏப்ரல் 4 வரை சென்னை மற்றும் பெங்களூரு இடையே மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து மைசூரு வரையிலான முழு சேவை ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    மார்ச் 14 முதல் ஏப்ரல் 4 வரை, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(எண் 20664), சென்னை சென்ட்ரலில் இருந்து 17.00 மணிக்குப் புறப்பட்டு, 21.25 மணிக்கு SMVT பெங்களூருவை சென்றடையும்.

    நான்கு மணி 25 நிமிடங்களில் இந்த ரயில் 358 கிலோ மீட்டர்களை கடக்கும்.

    திரும்பும் போது, இந்த ரயில் SMVT பெங்களூரில் இருந்து 07.50 மணிக்குப் புறப்பட்டு, 12.25 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பெங்களூர்
    மைசூர்
    வந்தே பாரத்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 13 தங்கம் வெள்ளி விலை
    வெற்றி துரைசாமியின் தகனத்திற்கு பிறகு சைதை துரைசாமி சூளுரை சைதை துரைசாமி
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு  தங்கம் வெள்ளி விலை
    சென்னையின் ஐகானிக் உதயம் தியேட்டர் மூடப்படுகிறது தியேட்டர்

    பெங்களூர்

    இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் இந்திய கிரிக்கெட் அணி
    தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன? கௌதம் வாசுதேவ் மேனன்
    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன் ஓபன்ஏஐ
    OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண் ஆன்லைன் மோசடி

    மைசூர்

    3 ஆண்டுகளில் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த கர்நாடக மருத்துவர் கைது கர்நாடகா

    வந்தே பாரத்

    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம் இந்திய ரயில்வே
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025