NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு 
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jun 08, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    2024ம் ஆண்டின் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான அறிவிப்பினை வெளியிடும் நிகழ்வானது நேற்று(ஜூன்.,7) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்தது.

    இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுநலத்துறை இயக்குனர் இளம்பகவத், திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கம் காரணமாகவே இந்த சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.

    உலகிலுள்ள எம்மொழியாக இருந்தாலும் சரி, சிறந்த படைப்பாளர் கொண்டாடப்பட வேண்டும்.

    அவர்களின் அருமையான படைப்புகள் தமிழக மக்களுக்கு சேர வேண்டும்.

    இந்த நோக்கமானது புத்தக கண்காட்சி நடத்துவதன் மூலம் நடக்கும்" என்று கூறியுள்ளார்.

    புத்தகம் 

    மொழிபெயர்ப்பு மானியம் ரூ.3 கோடி - தமிழக அரசு 

    தொடர்ந்து பேசிய அவர், "கடந்தாண்டு புத்தக கண்காட்சி குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

    அப்போது 24 நாடுகளிலிருந்து 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வர மொழிபெயர்ப்பு மானியம் ரூ.3 கோடியினை தமிழக அரசு வழங்கவுள்ளது.

    கருணாநிதி நூற்றாண்டாக கொண்டாடப்படும் இந்தாண்டு மொழிபெயர்ப்பிற்கான மானியம் வழங்கப்படுவது பெருமையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள இந்த 2வது சர்வதேச புத்தகக்கண்காட்சி ஜனவரி 16ல் இருந்து 18 வரை 3 நாட்களுக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது என்று இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புத்தக கண்காட்சி
    தமிழக அரசு
    பள்ளிக்கல்வித்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    புத்தக கண்காட்சி

    புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து!  தமிழ்நாடு

    தமிழக அரசு

    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள்  மாவட்ட செய்திகள்
    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்  திருப்பூர்
    தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம்  தமிழ்நாடு

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025