NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம் 
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 01, 2023
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    100க்கும்மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரியில் 3ம்ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவி ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் நேற்று(மே.,30)சுமார் 2 மணியளவில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

    இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரி முதல்வரிடம் புகாரளித்துள்ளார்.

    ஆனால் அந்த புகார்மீது கல்லூரி முதல்வர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டமிட்டனர்.

    அவர்களிடம் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் செங்கல்பட்டு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல்தொந்தரவு கொடுத்த மருத்துவர் ஜிஜேந்திரனை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN || செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் சஸ்பெண்ட்

    மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் உத்தரவு

    நேற்று பயிற்சி மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர்… pic.twitter.com/9qPPfN8hK5

    — Thanthi TV (@ThanthiTV) June 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செங்கல்பட்டு
    போராட்டம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025