NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்
    சந்திரபாபு நாயுடுவிக்கு இடைக்கால ஜாமின்.

    திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்

    எழுதியவர் Srinath r
    Nov 20, 2023
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, நவம்பர் 28ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த அக்டோபர் 31ம் தேதி, மருத்துவ காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரம் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழகத்தில் பல கோடி ஊழலில் ஈடுபட்டதற்காக, குற்றப் புலனாய்வுத்துறையால் (சிஐடி) கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

    கைதுக்கு பின்னர், சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    2nd card

    திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கின் வரலாறு

    ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு பின், ஆந்திர பிரதேசத்திற்கு என தனியாக, ஆந்திர பிரதேச மேம்பாட்டு கழகம் என்பது தொடங்கப்பட்டது. மேலும் இது அரசாங்கம்-தனியார் கூட்டணியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்காக சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் சிஸ்டம் லிமிடெட் உடனான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

    90% தனியார் பங்களிப்புடனும், 10% அரசாங்க பங்களிப்புடனும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது.

    இந்த நிறுவனத்துடன் ₹3356 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின் படி சீமென்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும். ஆனால் அந்நிறுவனம் அவ்வாறு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    அதேசமயம் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டதாக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு, முறைகேடு நடந்திருப்பதாக குற்றப்புலனாய்வு துறை கண்டறிந்து இருந்தது.

    3rd card

    முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் சீமென்ஸ் நிறுவனம்

    சீமென்ஸ் நிறுவனம் வழக்கத்திற்கு மாறாக திட்டத்தின் தொகையை ₹3,300 கோடியாக உயர்த்தியுள்ளது. இதனால் இதில் நிதிமுறை கேட்டு நடந்திருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிந்தனர்.

    சீமென்ஸ் நிறுவனம் வழங்கிய தொழில்நுட்ப உதவிகளின் மதிப்பு வெறும் ₹58 கோடி எனவும், ஆனால் ஆந்திரா அரசு ₹371 கோடியை வழங்கியது எனவும் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முக்கிய பங்காற்றிய 26 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, பத்திருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாகவே, ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான, சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    உயர்நீதிமன்றம்
    கைது
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆந்திரா

    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்  தமிழ்நாடு
    காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார்  அமித்ஷா
    சில்க் ஸ்மிதா மரணத்தில் 26 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் - க்ரைம் ஸ்டோரி  நடிகைகள்
    தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் பாஜக

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    கைது

    ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா ஆந்திரா
    சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது போராட்டம்
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி திருமணங்கள்
    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு சென்னை

    முதல் அமைச்சர்

    கக்கன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மு.க.ஸ்டாலின்
    திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின்
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  சிக்கிம்
    DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர்  திறந்து வைத்தார்  தமிழக முதல்வர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025