NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 09, 2023
    09:00 am
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 
    கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

    ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) தலைவருமான என் சந்திரபாபு நாயுடுவை, இன்று(செப் 9) குற்றப் புலனாய்வுத் துறையினர்(சிஐடி) கைது செய்தனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார். "நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அதிகாரிகள் நேற்று இரவு வந்து எந்த ஆதாரமும் காட்டாமல் என்னை கைது செய்தனர். என்னை கைது செய்ததற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டேன். அதற்கான ஆதாரத்தையும் கேட்டேன். அவர்கள் எஃப்.ஐ.ஆர் மூலம் இங்கு வந்துள்ளனர். அதில் எனது பங்கு பற்றியோ அல்லது கூடுதல் விவரங்களோ இல்லை. இது மிகவும் வருத்தமானது மற்றும் தவறானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    2/2

    FIRரில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படவில்லை

    இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை(FIR) 2021இல் பதிவு செய்யப்பட்டது. 250 கோடிக்கு மேல் சொத்துக் குவித்துள்ளதாக இந்த FIR சந்திரபாபு நாயுடுவின் மீது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு 1வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போது, FIR விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அவரது வழக்கறிஞர்கள் FIR அறிக்கையில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி முதன்மை சாட்சியத்தையும் கோரினர். வழக்கறிஞர்களுக்கு பதிலளித்த காவல்துறை அதிகாரிகள், 24 மணி நேரத்திற்குள் அனைத்து விவரங்களையும் ரிமாண்ட் அறிக்கையில் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். மேலும், சந்திரபாபு நாயுடு விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆந்திரா
    காவல்துறை
    காவல்துறை

    ஆந்திரா

    திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை  திருப்பதி
    பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்  தெலுங்கானா
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் விவசாயிகள்
    நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி நடிகர் சூர்யா

    காவல்துறை

    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023