Page Loader
ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன் 

ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன் 

எழுதியவர் Sindhuja SM
Feb 05, 2024
02:46 pm

செய்தி முன்னோட்டம்

47 கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவளித்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரன் இன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிக்கு 29 வாக்குகள் கிடைத்தன. சம்பை சோரனின் வெற்றியை ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதற்கு ஜார்க்கண்ட் சட்டசபையில் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து, சட்டசபை இன்று ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சட்டசபை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவையின் பெரும்பான்மை மதிப்பெண் 41 ஆகும். இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் பேசிய சம்பை சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சிக்கு 47 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், அது 50 ஆக அதிகரிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

ஜார்க்கண்ட்

'மாநில அரசாங்கத்தை கலைக்க பாஜக முயற்சி': சம்பை சோரன் 

அதன் பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கூட்டணி எம்எல்ஏக்கள் உட்பட 47 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். 29 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஜார்க்கண்ட் சட்டசபையின் இன்றைய சிறப்பு அமர்வில் பேசிய முதல்வர் சம்பை சோரன், மாநில அரசாங்கத்தை கலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். "ஹேமந்த் சோரனை பொய் வழக்குகளில் சிக்க வைக்க பாஜக மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது," என்று நம்பிக்கைத் தீர்மானத்தை முறியடித்ததற்கு பிறகு சம்பை சோரன் கூறினார்.