NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள்
    ஐஐடிகளில், இதுவரை பல தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது.

    ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 12, 2023
    09:40 am

    செய்தி முன்னோட்டம்

    பிப்ரவரி 12 அன்று, மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்(ஐஐடி) முதலாம் ஆண்டு பிடெக் படித்து கொண்டிருந்த மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இதே போல் நாடுமுழுவதும் உள்ள ஐஐடிகளில், இதுவரை பல தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது.

    கடந்த மாதம், ஐஐடி சென்னையில் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றனர். அதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

    ஐஐடிகளில் சாதிய பாகுபாடுகள் அதிகம் பார்க்கப்படுவதாக பல்வேறு இயக்கங்களும் மாணவர் அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    மாணவர் தர்ஷன் சோலங்கிக்கும் அதே போன்ற சாதிய துன்புறுத்தல்கள் தான் நடந்ததாக கூறப்படுகிறது.

    அவரது பெற்றோரும் இதே குற்றசாட்டை தான் முன் வைக்கின்றனர்.

    இந்தியா

    இது தற்கொலை அல்ல நிறுவன கொலை: மாணவர்கள்

    1960கள் முதல் 2000 வரை, ஆதிக்கச்சாதி மாணவர்கள் மட்டுமே ஐஐடியில் அதிகம் படித்து வந்தனர்.

    ஆதிக்கச்சாதி மாணவர்களுக்கு மட்டும் அதிக அறிவும் ஒழுக்கமும் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்தது எல்லாம் தனிச்சலுகைகள் மட்டுமே என்கின்றனர் முற்போக்கு அமைப்பினர்.

    ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகும் ஐஐடி நிறுவனத்தில் குறைந்த அளவில் மட்டுமே பட்டியலின மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

    மாணவர்கள் மாட்டமில்லாமல் இங்குள்ள ஆசிரியர்கள் நியமனத்திலும் பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுகிறது.

    ஐஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி,ஓபிசி ஆகிய வகுப்பினருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடாமலேயே இருப்பது கடந்த வருட மக்களவைக் கூட்டத்தில் தெரியவந்தது.

    ஐஐடியில் நடக்கும் சாதிய பாகுபாடுகளுக்கு இதுவும் ஒரு பெரும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    தங்கம் விலை இன்றும் குறைவு - இன்றைய நாளின் விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா உலகம்
    வேவு பார்க்க அனுப்பப்பட்ட புறா, ஒடிஷா கடற்கரையில் பிடிபட்டது இந்தியா
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025