Page Loader
கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு 

கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு 

எழுதியவர் Sindhuja SM
Jun 19, 2024
07:36 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் பாதரசம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், டெல்லி-என்சிஆரில் உள்ள மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் வெப்ப பக்கவாதம் மற்றும் வெப்ப சோர்வு காரணமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹீட் ஸ்ட்ரோக் உள்ள நோயாளிகளை முன்னுரிமையின் அடிப்படையில் அனுமதிக்குமாறு டெல்லியில் உள்ள மருத்துவமனைகளிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் LNJP என்ற மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது, ​​ஒன்பது நோயாளிகள் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஒன்பது நோயாளிகளில், நான்கு நோயாளிகள் ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர்.

இந்தியா 

டெல்லியில் ​​​​மோசமடைந்து வரும் தண்ணீர் பற்றாக்குறை

ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக அவர்களுக்கு பல உறுப்புகள் செயலிழந்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், ஜூன் 16 அன்று, வெப்ப தாக்குதலால் ஒரு நோயாளி உயிரிழந்தார். ஹீட் ஸ்ட்ரோக் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு பல உறுப்புகள் செயலிழக்க தொடங்கும். வட மற்றும் வடமேற்கு இந்தியா முழுவதும் வெப்ப அலையின் பிடியில் உள்ளது ஆனால், ​​​​மோசமடைந்து வரும் தண்ணீர் பற்றாக்குறையால் டெல்லியில் இது இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.