NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
    அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்

    அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 13, 2024
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, தேசத்தை காலனித்துவ முத்திரைகளில் இருந்து விடுவிக்க, இன்று போர்ட் பிளேயரை ஸ்ரீ விஜய புரம் என்று மறுபெயரிட முடிவு செய்துள்ளோம்.

    முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜயபுரம் அடைந்த வெற்றியைக் குறிக்கிறது.

    நமது சுதந்திரப் போராட்டத்திலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனிப்பெரும் பங்கும் அதில் உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

    சோழர்கள்

    சோழர்களை குறிப்பிட்ட அமித் ஷா

    அமித் ஷா தனது எக்ஸ் பதிவுகளில் மேலும், "நமது சுதந்திரப் போராட்டத்திலும், வரலாற்றிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு.

    ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி இன்று நமது மூலோபாய மற்றும் வளர்ச்சி அபிலாஷைகளுக்கு முக்கியமான தளமாகத் திகழ்கிறது." என்று குறிப்பிட்டார்.

    தமிழகத்தை சேர்ந்த பிற்காலச் சோழர்களின் காலத்தில் தமிழகம் முதல் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளை ஆண்ட சோழர்களின் தளங்களில் ஒன்றாக இது விளங்கியது குறிப்பிடத்தக்கது.

    அமித் ஷா மேலும், "நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் நமது தேசியக் கொடியை முதன்முதலில் வெளிப்படுத்திய இடம் இதுவாகும். மேலும் வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராளிகள் அடைக்கப்பட்ட செல்லுலார் சிறையும் இங்குள்ளது." என்று கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமித் ஷாவின் எக்ஸ் பதிவு

    Inspired by the vision of PM @narendramodi Ji, to free the nation from the colonial imprints, today we have decided to rename Port Blair as "Sri Vijaya Puram."

    While the earlier name had a colonial legacy, Sri Vijaya Puram symbolises the victory achieved in our freedom struggle…

    — Amit Shah (@AmitShah) September 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அந்தமான் நிக்கோபார்
    அமித்ஷா
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அந்தமான் நிக்கோபார்

    கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் இந்தியா
    'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை  இந்தியா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல் மத்திய அரசு

    அமித்ஷா

    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல் கேரளா
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்

    மத்திய அரசு

    புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தண்ணீர் கசிவு; எதிர்க்கட்சிகள் காட்டம் நாடாளுமன்றம்
    மத்திய அரசின் ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதாவிற்கு எதிர்ப்பு யூடியூபர்
    ஐபோன், iPad பயனர்களுக்கு அதிக ஆபத்துள்ள பாதிப்பு எச்சரிக்கையை வெளியிட்ட CERT -IN ஆப்பிள்
    வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் மத்திய அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025