NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு 

    ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 13, 2024
    01:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) திருத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளதாக எழுந்த வதந்திகளுக்கு மத்தியில், மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னருக்கு கூடுதல் அதிகாரத்தை அளித்துள்ளது.

    உள் பாதுகாப்பு, அரசாங்க வழக்கறிஞர்களை நியமித்தல், அரசாங்க அதிகாரிகளை இடமாற்றுதல் உள்ளிட்ட விஷயங்களில் தற்போது ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழக்கப்பட்டுள்ளது.

    எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இனி மேற்கூறிய விஷயங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே இருக்கும்.

    இந்தியா 

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

    "சட்டத்தின் கீழ் காவல்துறை, பொது ஒழுங்கு, ஏஐஎஸ் மற்றும் ஏசிபி தொடர்பான நிதித் துறையின் ஒப்புதல் தேவைப்படும் எந்த முன்மொழிவும் தலைமைச் செயலர் மூலம் லெப்டினன்ட் கவர்னரிடம் முன்வைக்கப்படாவிட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாது அல்லது நிராகரிக்கப்படாது." என்று இதற்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    MHA அறிவிப்பின்படி, அட்வகேட்-ஜெனரல் மற்றும் பிற சட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கான திட்டங்களை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை, லெப்டினன்ட் கவர்னரிடம் முன்வைக்கும்.

    தலைமைச் செயலர் மற்றும் முதல்வர் மூலம் இது முன்வைக்கப்படும்.

    வழக்குத் தடைகள் அல்லது மேல்முறையீடுகள் தொடர்பான முன்மொழிவுகளும் இதே நடைமுறையில் செயல்படுத்தப்படும்.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது ஜூலை 12 முதல் நடைமுறைக்கு வந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்தியா

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்வதாக தகவல்  பயங்கரவாதம்
    'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் ​​தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம்  இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம் பாதுகாப்பு துறை
    "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங் ராஜ்நாத் சிங்

    இந்தியா

    'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல்  உத்தரப்பிரதேசம்
    இன்று நடைபெறவிருந்த நீட்-யுஜி  கலந்தாய்வு திடீரென்று ஒத்திவைப்பு  நீட் தேர்வு
    கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு கேரளா
    அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அசாம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025