NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு 

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 24, 2024
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு மகப்பேறு நலன்கள் எதுவும் குறிப்பிடப்படாத 50 ஆண்டுகால விதிமுறையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட மத்திய சிவில் சர்வீசஸ் (விடுப்பு) விதிகள், 1972ன் படி, "இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை பெற்ற தாய், அரசு ஊழியராக இருந்து, அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டால், அவருக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியா 

     தந்தைக்கும் 15 நாட்கள் விடுப்பு 

    இயற்கையாகப் பிரசவிப்பவர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு சலுகைகள், வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கும் கிடைப்பதை இந்த சட்ட திருத்தம் உறுதி செய்கிறது.

    மேலும், இந்த சட்ட திருத்தத்தின் படி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தந்தைக்கும் 15 நாட்கள் விடுப்பு வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை அவர் எடுத்துக்கொள்ளலாம்.

    தற்போதுள்ள விதிகளின்படி, பெண் மற்றும் ஆண் அரசு ஊழியர்கள் இருவரும் தங்கள் முழுப் பணிக் காலத்தில் 730 நாட்கள் வரை குழந்தை பராமரிப்பு விடுப்பு எடுக்கலாம்.

    மத்திய சிவில் சேவைகள் (விடுப்பு) (திருத்தம்) விதிகள், ஜூன் 18 அன்று அறிவிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    மே 2024 கார் விற்பனையில் 1% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது ஹூண்டாய்  ஹூண்டாய்
    பாபர் மசூதி போன்ற தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் இருந்து நீக்கியது சரியே: NCERT தலைவர் வாதம்  இந்தியா
    பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார் அமெரிக்கா
    2 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட இந்திய குவாண்டம் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் உருவாகியுள்ளன ஸ்டார்ட்அப்

    மத்திய அரசு

    ஆதார் கேள்விப்பட்டிருப்பீர்கள்..அதென்ன பால் ஆதார்? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது? ஆதார் புதுப்பிப்பு
    விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி விண்வெளி
    25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு  பிரதமர் மோடி
    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு  கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025