NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு! 
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு

    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 19, 2023
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை (Windfall Tax) மீண்டும் உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. விண்டுஃபால் வரி என்றால் என்ன, அது ஏன் விதிக்கப்படுகிறது?

    விண்டுஃபால் வரி:

    ஒரு நிறுவனத்துக்கு அல்லது துறைக்கு எதிர்பாராத வகையில் திடீரென வெளிப்புறக் காரணிகளால், எதிர்பார்ப்பை விட கூடுதல் லாபம் கிடைக்கும் போது, அந்த லாபத்தின் மீது விண்டுஃபால் வரியை மத்திய அரசு விதிக்கும்.

    ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக கடந்த ஆண்டு திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்தன. வெளிப்புறக் காரணியால் ஏற்பட்ட இந்த விலையேற்றத்தால் பெட்ரோல், டீசல் நிறுவனங்களுக்கு எதிர்பாராமல் திடீரென அதிக லாபம் கிடைத்ததையடுத்து அந்தத் துறையில் விண்டுஃபால் வரியை அமல்படுத்தியது மத்திய அரசு.

    இந்தியா

    இப்போது என்ன அறிவிப்பு: 

    தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா பெட்ரோல் மீது டன்னிற்கு ரூ.6,400-ஐ சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதித்திருக்கிறது மத்திய அரசு. இந்த வரி விதிப்பு பெட்ரோல் மற்றும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் வரிகளை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், டீசல் மீதான ஏற்றுமதி வரியை நீக்கியும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதனால் டீசல் மீது ஏற்கனவே இருந்த சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.0.50 முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு உற்பத்தி துறைக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது.

    விண்டுஃபால் வரியானது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பரிசீலனை செய்யப்பட்டு சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டவோ, குறைக்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    இந்தியா

    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   உச்ச நீதிமன்றம்
    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  தன்பால் ஈர்ப்பாளர்கள்
    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்!  ஆப்பிள் நிறுவனம்

    மத்திய அரசு

    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு டெல்லி
    பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல் வாகனம்
    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியா
    10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல் ஆதார் புதுப்பிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025