NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
    காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
    இந்தியா

    காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    September 06, 2023 | 01:44 pm 1 நிமிட வாசிப்பு
    காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
    காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

    காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நெடுநாளாக நடந்து வரும் நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காவிரி நீதிநீரினை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்று கர்நாடகா மறுப்பு தெரிவித்ததால், கடந்த 14ம்தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது. அதன்படி, காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000.,கன அடிநீர் திறந்துவிடப்படும் என்று கூறிய நிலையில், வினாடிக்கு 24,000.,கன அடிநீர் திறந்துவிடவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கானது 3 உச்சநீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 25ம்தேதி இதுதொடர்பான விசாரணை நடந்த பொழுது ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் திறக்கப்பட்டதா?என ஆணையம் அறிக்கை அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையினை செப்டம்பர் 1ம்.,தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    அவசர வழக்காக விசாரிக்க கோரிய தமிழக அரசு 

    இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை செப்.,11ம் தேதி நடந்தால் போதுமானது என்று கர்நாடகா அரசு கூறியநிலையில், இதனை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில் செப்.,6ம் தேதியான இன்று இந்த வழக்கின் விசாரணை நடக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் இதனை விசாரிக்கும் 3 நீதிபதிகளுள் ஒருவரான நரசிம்மா விடுப்பில் சென்றுள்ளதால் இன்றைய விசாரணை பட்டியலில் இவ்வழக்கு இடம்பெறவில்லை. எனவே, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணை வரும் 21ம் தேதி நடக்கும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே, தமிழக அரசு இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் வேண்டுமானால் இதுகுறித்து முறையிடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    கர்நாடகா
    உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாடு

    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை மு.க ஸ்டாலின்
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு
    9 தமிழக மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    கர்நாடகா

    கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம் டெல்லி
    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் விவசாயிகள்
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்

    உச்ச நீதிமன்றம்

    இந்தியாவா? பாரதமா? 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்  ஜம்மு காஷ்மீர்
    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்
    செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி பெற்றோர்களின் சொத்துக்களில் உரிமை உண்டு  சட்டம் பேசுவோம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023