NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தருமபுரி: காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் சகோதரர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தருமபுரி: காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் சகோதரர்கள்

    தருமபுரி: காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் சகோதரர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 28, 2024
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    தர்மபுரி எலக்கியம்பட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த முகமது ஆஷிக் என்ற அந்த நபர் ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைந்தவர்கள் பலமுறை கத்தியால் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹோட்டலுக்குள் நுழைவதைக் காட்டியது.

    அவர்களில் இருவர் ஆஷிக்கிடம் பேச முயன்றபோது, ​​​​குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து ஆஷிக்கைத் தாக்கினார்.

    ஆஷிக் அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றபோது, ​​​​தாக்குதல்காரர்கள் அவரை வளைத்து பலமுறை கத்தியால் குத்தினர்.

    ஹோட்டலின் மற்ற ஊழியர்கள் அதில் தலையிட்டு அவரை முயன்றபோது அவர்கள் ஊழியர்களையும் மிரட்ட தொடங்கினர்.

    தமிழகம் 

    ஆஷிக்கை கொலை செய்த அவரது காதலியின் குடும்பத்தார் 

    இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆஷிக்கை தருமபுரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகள் மீட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, ஆஷிக் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆஷிக் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டிருக்கிறார்.

    அதன் பிறகு, அந்த பெண்ணின் சகோதரர்களான ஜனரஞ்சன் மற்றும் ஹம்சப்ரியன் ஆகியோர் ஆஷிக்கை மிரட்டி இருக்கின்றனர்.

    இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிறரை காவல்துறை தேடி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்

    தமிழகம்

    சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான ரயில் சேவைகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு  சென்னை
    ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    தமிழகத்தில் களைகட்டிய பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூரில் சிறப்பு தொழுகை தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025