NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை 
    'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

    'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை 

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2024
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உரிமையாளர் பெயரோடு அவரது சாதி பெயரினை குறிப்பிட்டு கூறி காளைகளை அவிழ்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டுகளுள் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை போற்றும் விதமாக பொங்கல் திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இத்தகைய பண்டிகை காலத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி பெருமளவில் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.

    குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை ஆகும்.

    தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தனி மவுசு உள்ளது என்றால் அது மிகையாகாது.

    ஜல்லிக்கட்டு 

    மதுரை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் தேதிகள் அறிவிப்பு  

    மேலே குறிப்பிட்ட அந்த 3 இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், வெளிமாநிலங்களிலிருந்து மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகைத்தருவர்.

    இதன்படி, இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர், 3 இடங்களில் நடத்தப்படும் போட்டிக்கான தேதிகளை அறிவித்துள்ளனர்.

    பாலமேட்டில் ஜனவரி 16ம்.,தேதியும், அவனியாபுரத்தில் 15ம்.,தேதியும், அலங்காநல்லூரில் வரும் 17ம்.,தேதியும் நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்த்தப்படும் பொழுது உரிமையாளர்கள் பெயரோடு அவர்களது சாதிப்பெயரினை குறிப்பிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்படவேண்டும் என்னும் மனுதாரரின் கோரிக்கையினை பரிசீலனை செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    பொங்கல் திருநாள்
    மதுரை
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  உச்ச நீதிமன்றம்

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    மதுரை

    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு திருச்சி
    இன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை சென்னை
    இயக்குனர் சசிக்குமார்- தமிழ் சினிமாவின் சைலன்ட் வின்னர் நடிகர்
    மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு  எய்ம்ஸ்

    உயர்நீதிமன்றம்

    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம்  இந்தியா
    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம் கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025