NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானத்தில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக வல்கன் கிரீன் ஸ்டீல் CEO மீது வழக்கு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானத்தில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக வல்கன் கிரீன் ஸ்டீல் CEO மீது வழக்கு 

    விமானத்தில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக வல்கன் கிரீன் ஸ்டீல் CEO மீது வழக்கு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 21, 2024
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஓமனை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் குமார் சரோகி, தன்னை விமானத்தில் வைத்து பாலியல் ரீதியாக சீண்டியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியதை அடுத்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தினேஷ் குமார் சரோகி, ஓமனை தளமாகக் கொண்ட வல்கன் கிரீன் ஸ்டீலின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

    65 வயதான அவர் தன்னிடம் ஆபாச கிளிப்களைக் காண்பித்ததாகக் கூறி ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

    தனக்கு நடந்த இந்த் சம்பவத்தை அந்த பெண் ஒரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    கொல்கத்தாவில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் சரோகி தன்னுடன் எப்படி உரையாடினார் என்பதை அந்த பெண் விவரித்துள்ளார்.

    இந்தியா 

    எதிஹாட் ஏர்வேஸ் பணியாளர்களுக்கு பாராட்டு 

    முதலில் தன்னிடம் நன்றாக பேசி கொண்டிருந்த அவர், பிறகு தனது மொபைல் போனை வெளியே எடுத்து ஆபாச படங்களை தன்னிடம் காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எதிஹாட் ஏர்வேஸ் பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக கூறிய அந்த பெண் அவர்களை பாராட்டியுள்ளார்.

    "அவர்கள் என்னை அவர்கள் அமரும் பகுதியில் உட்கார வைத்து தேநீர் மற்றும் பழங்கள் வழங்கினார்கள்," என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

    அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், கொல்கத்தாவில் உள்ள பிதான்நகர் நகரக் காவல் துறையினர் சரோகி மீது இன்று 74(அடக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் குற்றவியல் சக்தியைத் தாக்குதல் அல்லது பயன்படுத்துதல்), 75(பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 79 (வார்த்தைகளை உச்சரித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    கொல்கத்தா

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    விமானம்

    டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது? ஜப்பான்
    கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி  ஜப்பான்
    டிக்கெட்டுகளுக்கான எரிபொருள் கட்டணத்தை குறைப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு; காரணம் என்ன? விமான சேவைகள்
    வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம்  அமெரிக்கா

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025