NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்
    இந்த வெ.அழகாபுரி கிராமத்தில் 3.5ஏக்கர் பரப்பளவில் ஒரு கண்மாய் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது இல்லை.

    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023
    05:33 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெ.அழகாபுரி என்ற கிராமத்தில் கண்மாய் மற்றும் கண்மாய்க்கு செல்லும் வழி காணாமல் போய்விட்டதாக அந்த ஊர் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

    இது தமிழக அமைச்சரும் திமுக தலைவருமான பி.மூர்த்தியின் தொகுதிக்கு உட்பட்ட கிராமமாகும்.

    இந்த கிராமத்தில் இருந்த கண்மாய், ஆக்கிரமிப்புகளால், காணாமல் போய் இருக்கிறது.

    இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் கேட்டபோது, அந்த இடத்தில் கண்மாய் இருந்ததற்கான ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த வெ.அழகாபுரி கிராமத்தில் 3.5ஏக்கர் பரப்பளவில் ஒரு கண்மாய் இருந்திருக்கிறது.

    மதுரை

    'அத்திப்பட்டி' போல் மாறிய வெ.அழகாபுரி

    கண்மாய் இருந்த இடத்தில் தனியார் நிறுவனத்திற்கு பிளாட்டு போடும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளதால் கண்மாய் காணாமல் போய் இருக்கிறது.

    கண்மாய் இல்லாததால் நிலத்தடி நீர் இல்லாமல் அந்த ஊர் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

    ஆகவே, தங்களது கண்மாயை கண்டுபிடித்து தருமாறு அந்த ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

    மேலும், அவர்கள் கிராமத்தில் குடிநீர், கழிப்பிடம், அங்கன்வாடி, ரேசன்கடை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இருக்கிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    அதனால், தங்கள் ஊர் சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் மாறிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்திலேயே இவ்வளவு பிரச்சனைகள் இருப்பது விமர்சகர்களை கேள்வி கேட்க வைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    மதுரை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தமிழ்நாடு

    வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று! வைரல் செய்தி
    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சுற்றுலாத்துறை
    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு மு.க ஸ்டாலின்
    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு சென்னை

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025