NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி
    பாலின சமத்துவம் மற்றும் பாலின நீதியை பாதுகாக்க இருபாலரின் குறைந்தபட்ச திருமண வயதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 21, 2023
    02:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போது இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகும். அதே வேளையில் ஆண்களுக்கான திருமண வயது 21 என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வயது வரம்பை சமமாக மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தாவது:

    பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாலின சமத்துவம் மற்றும் பாலின நீதியை பாதுகாக்க வேண்டும். அதற்கு இருபாலரின் குறைந்தபட்ச திருமண வயதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    எனவே இது தொடர்பாக டெல்லி மற்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களில் போடப்பட்டிருக்கும் மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியா

    இதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, டில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட அஸ்வினி உபாத்யாயின் மனுவை விசாரித்தபோது, ​​

    "பெண்களின் திருமண வயதான 18ஐ தன்னிச்சையாக நீக்கிவிடலாமா? அப்படி செய்தால் எத்தனை வயதுடைய பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம். ஏனென்றால், 21 வயதை அவர்களது திருமண வயதாக நிர்ணயிக்க உச்சநீதிமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது. இவை பாராளுமன்றம், சட்டசபைகள் மற்றும் அரசாங்கங்களின் வேலையாகும். பாராளுமன்றத்திற்கு வழிகாட்டுதலை அனுப்பவோ அல்லது சட்டத்தை இயற்றவோ உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை" என்று கூறிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா

    இந்தியா

    மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம் தமிழ்நாடு
    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
    விண்டோஸ் பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்! வாட்ஸ்அப்
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் ஆப்பிரிக்கா

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025