NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு

    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 26, 2023
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று வரை, உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் 15 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி, உடைந்துவிட்டது.

    அதன் பாகங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், மீட்பு பணி மேலும் தாமதமடைந்துள்ளது.

    இந்த நிலையில், மாற்று வழியாக, மீதம் உள்ள சுரங்க இடிபாடுகளை கைகளால் துளையிட திட்டமிட்டுள்ளதாக நேற்று உத்த்ரகாண்ட் முதல்வர் தெரிவித்திருந்தார்.

    இதற்காக இந்திய ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    கைகளால் சுரங்கப்பாதை அமைப்பது சவாலான காரியம் என்பதால், இந்திய ராணுவத்தின் உடல் பலமும், மனோதிடமும் தேவைப்பட்டுள்ளதால், அவர்களை நாடியுள்ளது மாநில அரசு.

    card 2

    பழுதடைந்து உடைந்த அமெரிக்க மெஷின்

    சில்க்யாரா சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, ஆஜர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

    ஏறக்குறைய 60 மீட்டர் இடிபாடுகளை உடைக்க, இந்த கனரக இயந்திரம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

    பலநாட்களாக தொடர்ந்து பழுதடைந்து, மீண்டும் சீர்செய்யப்பட்டு செயல்பட்டு வந்த இந்த இயந்திரம், வெள்ளிக்கிழமை முற்றிலுமாக உடைந்து சேதமடைந்து விட்டது.

    அதன் உச்சபட்சமாக, அதன் சில பாகங்கள் அந்த இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டது.

    இயந்திரத்தின் பல பாகங்கள் வெளியே கொண்டுவரப்பட்ட நிலையில், மிச்ச பாகங்கள், கைகளால் உடைத்து எடுக்க வேண்டும்.

    அதோடு சுரங்கத்தின் கடைசி 10-15 மீட்டர் நீளத்தை, கையடக்க மின் கருவிகளைக் கொண்டு உடைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    card 3

    கைகளால் எவ்வாறு துளையிடப்போகிறார்கள்?

    கைகளால் துளையிடுவது மிகவும் கடினமான பணியாகும். ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சிறிய பாதை வழியே ஊர்ந்து சென்று, கையடக்க இயந்திரத்தால் சில நேரம் துளையிட்டு, பின்னர் வெளியே வந்து, மாற்று ஆளை உள்ளே அனுப்ப வேண்டும்.

    இப்படி ஒருவர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்பதால், மீட்பு பணிகள் நாள்கணக்கில் நீளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பணியினை மேற்கொள்ளவே இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

    இந்திய ராணுவத்தின் பொறியாளர்களின் குழுவில் ஒன்றான மெட்ராஸ் சாப்பர்ஸின் ஒரு பிரிவு, மீட்பு நடவடிக்கைகளில் உதவுவதற்காக இன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

    360 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கும் தேவைப்படும் வெளிச்சம், ஆக்சிஜன், உணவு, தண்ணீர் மற்றும் மருந்து வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    card 4

    செங்குத்தாக துளையிடும் பணியும் தொடக்கம்

    துளையிடும் இயந்திரம் பழுதானதை தொடர்ந்து, மலையின் மீது செங்குத்தாக துளையிடும் பணியும் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏதேனும் ஒரு வகையில், தொழிலாளர்களை விரைந்து மீட்கவே இந்த நடவடிக்கை என அங்கே முகாமிட்டுள்ள நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

    துளைகளின் ஊடே சிக்கிக் கொண்ட ரோட்டரி பிளேடுகளை அகற்ற ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர், விமானம் மூலம் அனுப்பட்டுள்ளது.

    இது, இயந்திரத்தின் பாகங்கள் எங்கு உள்ளது என ஸ்கேன் செய்து கூறும் எனவும் கூறுகிறார்கள்.

    அதனால், மீட்பு பணி சற்று எளிதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறுபுறம், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் உரையாட BSNL உதவி கொண்டு ஒரு லேண்ட்லைன் இணைப்பை உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    அதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    சுரங்கபாதை
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    சுரங்கபாதை

    உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்? உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம் உத்தரகாண்ட்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025