NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள் 
    மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள்

    மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள் 

    எழுதியவர் Nivetha P
    May 23, 2023
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட கையோடு மணமகள் ஜல்லிக்கட்டு காளையினை சீராக தனது புகுந்த வீட்டிற்கு எடுத்து சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை அலங்காநல்லூர் பகுதியின் அருகேயுள்ள அய்யங்கோட்டை பகுதியினை சேர்ந்தவர் சிவபிரியா.

    பொது பணித்துறையில் பணியாற்றி வரும் இவர் தமிழர் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் காளையினை வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இவருக்கு நேற்று(மே.,22) நாகமலை புதுக்கோட்டை பகுதியினை சேர்ந்த ராஜபாண்டி என்பவரோடு திருமணம் நடந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இருவர் குடும்பத்தினர் மற்றும் உறவுகள், நட்பு வட்டாரம் உள்ளிட்டோர் சூழ திருப்பரங்குன்றம் தாலுகா அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இவர்கள் திருமணமானது மிக விமர்சையாக அரங்கேறியுள்ளது.

    ஜல்லிக்கட்டு 

    பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு 

    இதனை தொடர்ந்து திருமண சீராக சிவபிரியாவிற்கு பல்வேறு பொருட்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் பாசமாகவும், மிகுந்த ஆசையுடன் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த காளையினை மணமேடையில் ஏற்றிய மணமகள் தனது கணவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

    இதனையடுத்து, இருவரும் அந்த ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு மேடையில் நின்று புகைப்படங்களை எடுத்துள்ளார்கள்.

    பின்னர் சிவபிரியா தனக்கு கொடுக்கப்பட்ட மற்ற சீர் வரிசையோடு, தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையினையும் சீராக தனது புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் அங்கு கூடி இருந்தோரை நெகிழ்ச்சியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    ஜல்லிக்கட்டு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மதுரை

    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி விமான சேவைகள்
    மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார் இந்தியா
    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது பொங்கல் திருநாள்
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி காவல்துறை

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025