NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காரைக்காலில் முகக்கவசம் கட்டாயம்: ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காரைக்காலில் முகக்கவசம் கட்டாயம்: ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கை
    கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது.

    காரைக்காலில் முகக்கவசம் கட்டாயம்: ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    08:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனாவால் இன்று(ஏப் 3) காரைக்காலில் ஒரு பெண் உயிரிழந்திருக்கும் நிலையில், இனி முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவை அநத மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    காரைக்காலில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கொரோனாவால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

    இணை நோய்கள் இருந்ததே அந்த பெண் உயிரிழந்ததற்கு காரணம் என்று ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி சுகாதாரத்துறையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்தியா

    பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

    காரைக்காலில் கடந்த 4 நாட்களில் 20க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர்.

    இதனையடுத்து, அந்த மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மேலும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    "காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். திரையரங்கம், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்." என்று அந்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    புதுச்சேரி

    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை காவல்துறை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை போக்குவரத்து காவல்துறை
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு

    இந்தியா

    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - அறிமுகப்படுத்தும் சோமோட்டோ! எலக்ட்ரிக் வாகனங்கள்
    அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு மத்திய அரசு
    இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு மத்திய பிரதேசம்

    கொரோனா

    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி தொற்று
    கொரோனாவால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? இந்தியா
    சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் - பயணங்களை குறைத்துக்கொள்ள சீன அரசு அறிவுறுத்தல் சீனா
    ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள் வைரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025