Page Loader
இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா:  11 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் 3,641 புதிய கொரோனா பாதிப்புகளும், 11 இறப்புகளும் பதிவாகி இருக்கிறது

இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Sindhuja SM
Apr 03, 2023
02:39 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஏப்-2) 3824ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,641ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,641 புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது என்று இன்று(மார்-31) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,26,246) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நாட்டின் செயலில் உள்ள கொரோனா 20,219 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.05 சதவீதமாகும். சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, டெல்லி, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 1 உயிரிழப்பும், மஹாராஷ்டிராவில் 3 இறப்புகளும், கேரளாவில் 5 உயிரிழப்புகளும் நேற்று பதிவாகி இருக்கிறது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,892 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,75,135 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 6.12 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.45 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.76 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 59,512 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,12,500 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 686 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.