NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு 
    மூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு

    மூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 07, 2023
    06:22 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் 'மூளை உண்ணும் அமீபா'(Naegleria fowleri) என்னும் நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நோய் தொற்று ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் மூலம் தான் ஏற்படும் என்று கூறுவார்கள்.

    அதன்படி, மரணமடைந்துள்ள மாணவன் குருதத்(15) உடலில் இந்த அமீபாவானது, அவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் பொழுது, மூக்கின் வழியே உடலுக்குள் சென்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த அமீபா தொற்றானது இது போல் நீச்சலடிக்கும் போதோ, நமது தலைப்பகுதி முழுமையாக நீருக்குள் மூழ்கும்பொழுதோ, தான் நமது மூக்கு வழியே உள்ளே சென்றடையும் என்று கூறப்படுகிறது.

    நோய் 

    அரிய வகை நோய் தொற்று பாதிப்பு 

    இந்த அரிய வகை நோய் தொற்று பாதிப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் குருதத், இன்று(ஜூலை.,7)சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இந்த நோய் தொற்றின் அறிகுறிகள், முதலில் காய்ச்சல், மூக்கில் நீர் வழிதல், வாந்தி போன்றவை மூலம் அறியப்படும்.

    நோய் தொற்று பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், கழுத்துப்பகுதி இறுக்கமாவது, குழப்பம், சுயநினைவு இல்லாமல் எதையோ யோசித்தவாறு இருப்பது, கற்பனைகள், வலிப்பு, கோமா உள்ளிட்டவை ஆகும் என்று கூறப்படுகிறது.

    முதன்மை அனிபீக் மெனிங்கோ என்செபாலிடிஸ்(Meningoencephalitis-PAM) என்னும் இந்த தொற்று, Naegleria Fowleri என்னும் சூடான நன்னீரில் காணப்படும் நுண்ணிய ஒற்றை செல் அமீபாவால் ஏற்படுகிறது.

    இந்த நோய் தொற்று ஏற்பட்டால் 5நாட்கள் முதல் 18 நாட்கள்வரை மட்டுமே உயிர் வாழமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    தொற்று

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கேரளா

    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு இந்தியா
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்
    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்  தமிழக அரசு
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு வைரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025