NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 05, 2024
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பல அமைச்சர்களுக்கு இன்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

    சனிக்கிழமை பிற்பகல் 2:48 மணிக்கு பெங்களூருவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிய ஷாஹித் கான் என்ற நபர் இந்த மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.

    Shahidkhan10786@protonmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

    "படத்தின் டிரெய்லர் எப்படி இருந்தது? நீங்கள் எங்களுக்கு 2.5 மில்லியன் டாலர்களை வழங்கவில்லை என்றால், கர்நாடகா முழுவதும் பேருந்துகள், ரயில்கள், கோயில்கள், ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் நாங்கள் பெரிய குண்டு வெடிப்புகளை ஏற்படுத்துவோம்" என்று அந்த மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா

    அடுத்து அம்பாரி உத்சவ் பேருந்தில் குண்டு வைக்க போவதாக தகவல் 

    "இன்னும் ஒரு டிரெய்லரை உங்களுக்குக் காட்ட விரும்புகிறோம். அடுத்த வெடி குண்டை அம்பாரி உத்சவ் பேருந்தில் வெடிக்க வைக்க போகிறோம். அம்பாரி உத்சவ் பேருந்து குண்டுவெடிப்புக்குப் பிறகு, நாங்கள் எங்கள் கோரிக்கைகளை சமூக ஊடகங்களில் எழுப்புவோம். மேலும் உங்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பதிவேற்றுவோம். சமூக ஊடகங்களில், அடுத்த குண்டு வெடிப்பு பற்றிய தகவலை ட்வீட் செய்வோம்," என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

    உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் அல்லது ரயில்கள் போன்ற பரபரப்பான இடங்களில் வெடிகுண்டு வைக்க போவதாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் பெங்களூரு உயர் போலீஸ்காரர்கள் ஆகியோருக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    பெங்களூர்

    கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை பிரிட்டன்
    வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு சென்னை
    பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் திரைப்படம்
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025